Wednesday, December 11, 2019

sangailakkiyangal

                                                                            சங்க இலக்கியங்கள்  


                 தமிழ் மொழியின்மீது ஆர்வமும் பற்றும் கொண்ட பண்டைய தமிழ் மன்னர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தனர் .அச்சங்கங்கள் மூன்றாகும். சங்கம் என்றால் கூட்டு புணர்ப்பு அவை என்னும் பல பொருள்கள் உண்டு . தொல்காப்பிய இலக்கண நூலுக்குப்  பாயிரம் வழங்கிய பனம்பாரனார் " வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத்    தமிழ்கூறு நல்லுலகம்"  என்று   கூறும்போது  தமிழகத்தின் எல்லை என்ன என்பதைப் பதிவு செய்கிறார் .இன்றைய கன்னியாகுமரிக்கு தெற்ககே பண்டை நாளில் தமிழக எல்லை பரந்து விரிந்திருந்தது  அப்பகுதி நாவலந்தீவு எனப்பட்டது. இப்பகுதியில் பண்டடைய பாண்டிய மன்னர்கள் சங்கம் அமைத்தனர் .முதல் சங்கம் கடல்கொண்ட தென் மதுரையில் அமைந்திருந்தது .இடைச்சங்கம் கவாடபுரத்தில் அமைந்திருந்தது . முதல்  இரு சங்கங்களும் கடலால்  அழிந்தபின் மூன்றாம் சங்கம் நிலம் சூழ்ந்த இன்றைய மதுரையில் அமைக்கப்பட்டது.  
    
              முதல் இரு சங்கங்களும் அழிந்தபின்பு மூன்றாம் சங்கம் நிலம் சூழ்ந்த மதுரையில் அமைக்கப்பட்டது. சங்கங்கள் கடலால் அழிந்த செய்தியை கலித்தொகை , சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்கள் தரும் சான்றுகளால் அறியலாம்.

                      பகுருளி ஆற்றுடன்  பன்மலை அடுக்கத்துக்  
                      குமரிக் கோடும் கொடும்கடல் கொள்ள 

என்று சிலப்பதிகாரமும்  

                      மலிதிரை  ஊர்ந்து தண்  மண்கடல் வவ்வலின் 

என்று முல்லைக்கலியும் சான்று பகர்கின்றன. மூன்றாம் சங்கத்தில் படைக்கப்பட்ட எட்டுத்தொகை  , பத்துப்பாட்டு , கூத்து வரி ,சிற்றிசை ,பேரிசை ஆகிய இலக்கியங்களில் தற்போது கிடைப்பவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் மட்டுமே. 

          நற்றிணை , குறுந்தொகை , ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு , புறநானூறு  என்பவை எட்டுத்தொகை  நூல்கள் . இவை  அடி வரையறையின்  அடிப்படையில் உதிரிப் பாடல்களாக  உள்ளன. திருமு ருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை , குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்  அல்லது கூத்தராற்றுப்படை என்பன அடியளவால் நீண்ட பத்துப்பாட்டு நூல்களாகும்.பத்துப்பாட்டில் பெரியது மதுரைக்காஞ்சி இது 782 அடிகளை உடையது . பத்துப்பாட்டில் சிறியது முல்லைப்பாட்டு இது 103 அடிகளை உடையது. ஆற்றுப்படை நூல்களில் சிறியது பொருநராற்றுப்படை.  பெரியது கூத்தராற்றுப்படை .


நற்றிணை 

       நற்றிணை எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக அமைந்திருக்கிறது .திணையின் பெயரால்  அமைந்த நூல். நல் என்பது அடைமொழி.  ஐந்திணை தழுவிய நானூறு  பாடல்களை உடையது . பாடிய புலவர்களின் எண்ணிக்கை இருநூற்று எழுபத்தைந்து . பதின்மூன்று  அடிகளை உடைய இரண்டு பாடல்கள் உள்ளன.  கடவுள் வாழ்த்துப் பாடியவர்  பாரதம் பாடிய பெருந்தேவனார் . கடவுள் வாழ்த்து திருமாலைப்  பாடுகிறது .திருமால் "தீதற விளங்கிய திகிரியோன்" என்று  சிறப்பிக்கப்படுகிறான் . தொகுப்பித்தவர் பன்னாட்டு தந்த மாறன் வழுதி  . தொகுப்பித்தவர் யார் எனத் தெரியவில்லை 1914 ஆண்டு நற்றிணையை  முதன்முதலாகப்  பதிப்பித்தவர் பின்னத்துர்  நாராயணஸ்வாமி அய்யர் . நற்றிணை  கருத்தாழம் மிக்க பாடல்கள் பலவற்றையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

சில செய்திகள் 


  • தலைவன் நண்டின்மேல்  தேர்  ஏற்றாமல் சென்ற ஜீவகாருண்ய ஒழுக்கம். 
  • நாரை , கிளி , குருகு  ஆகியவற்றைத்  தூது  விடுத்த வழக்கம் .
  • உண்மையன செல்வம் இரக்கமாகிய  பண்பும் அடைக்கலமாக வந்தவரைக்  காப்பதுமாகும் .
  • நீர் இல்லாமல் உலக வாழ்க்கை அமையாது .
  • நட்பின்   சிறப்பு 
  • நள்ளிரவில் விருந்தினர்கள் வந்தாலும் அவர்களைப்  போற்றி உபசரிக்கும்  பண்பு 
  • முதுமைக்காலத்திலும் அன்பு கொண்டவரைக் காத்தல் 
  • கடைத்தெரு நியமம்  எனப்பட்டது 
  • குறிஞ்சி நிலா ஊர்களில் ஊர்க்காவல் வழக்கில் இருந்தது 
  • மருத்துவர் அறவோர்  எனப்பட்டனர் 
  • மன்னனால் வணிகர்களுக்கு காவிதி  என்னும் பட்டம் வழங்கப்பட்டது 
  • தோண்டி,கோரிக்கை,கிடங்கில்,ஆற்காடு ,மருங்கூர்ப் பட்டினம் ,முள்ளூர்  என்னும் ஊர்களைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன .
  • தைந்நீராடல் பற்றிய குறிப்பு காணப்படுகிறது 
  • கடற்கரையில் தங்கி நோன்பு நோற்ற  பெண்கள் படிவ மகளிர் எனப்பட்டனர் .
  • சாபம் தாமம் அர்ச்சிரம் என்னும் வடசொற்கள் இடம்பெற்றுள்ளன 
  • கண்ணகியின் வாழ்வோடுஒத்த திருமாவுண்ணியின் வாழ்வு பேசப்படுகிறது 
தொடரும் ......












































   

Thursday, October 10, 2019

IDEAS OF PHD TAMIL RESEARCH


அன்பிற்கினிய ஆய்வாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

       தமிழ் இலக்கியம் இலக்கணம் நாட்டுப்புறவியல் முதலான களங்களில் ஆய்வு நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஆய்வாளர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத்  தீர்த்துக்கொள்ளவும் ஆய்வு தொடர்பான ஆலோசனைகளைப் பெறவும் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் .

      சிறந்த முறையில் உதவிப்பேராசிரியர் மற்றும் இளநிலை ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெறவும் முதுகலைத்  தமிழாசிரியர் தேர்வில் வெற்றி பெற்று அரசுப்பணி ஏற்கவும் சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும்.

சங்கத்தமிழ் பயிற்சி மையம் 
112/3 அண்ணாசாலை 
பொன்னமராவதி 
புதுக்கோட்டை மாவட்டம்-622403

முனைவர் கதிர்முருகு 
8220820253